×

தளவாய்புரத்தில் ரத்ததான முகாம்

ராஜபாளையம், ஜூலை 30: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2ம் ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு ஐந்து கிலோ அரிசிப்பை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, செட்டியார்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் விநாயகமூர்த்தி, அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தளவாய்புரத்தில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Ratathana camp ,Dalwaipuram ,Rajapalayam ,Blood Donation ,Talavaipuram ,Rice Mill Owners Association ,Thalavaipuram ,Rajapalayam, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்